பனிரெண்டார் இளைஞர் சங்கம்

நமது பனிரெண்டார் இளைஞர் சங்கம் 1967ஆம்ஆண்டு அக்கரைபாளயத்தில் திரு.A.M.R.பழனிசாமி அவர்களை தலைவராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.

சங்கத்தின் ஆரம்ப நோக்கங்கள்:

  1. பனிரெண்டார் சமூகத்தை சார்ந்த இளைஞர்களிடம் நன்கொடை வசூல் செய்து பனிரெண்டார் கல்யாண மண்டப டிரஸ்டுக்கு கொடுத்து இச்சங்கத்தின் நினைவாக மண்டபமோ,சமையற்கூடமோ கட்ட உதவுவது.
  2. பனிரெண்டார் சமூக இளைஞர்களின் கல்வி தரத்தை உயர்த்த எல்லா விட உதவிகளையும்,நன்கொடைகளையும் அளித்தல்.
  3. சமூகத்தில் வசதி குறைந்தவர்களுக்கு திருமணம் நடத்த சங்கத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்த பட்சம் ஒரு திருமானத்தையாவது சிக்கனமான முறையில் நடத்தி வைத்தல்.
  4. சமூகத்தில் உள்ள பழமையான தேவையில்லாத வீண் செலவையும்,ஆடம்பரத்தையும் கொண்ட சில பழக்க வழக்கங்களையும்,சம்பிரதாயங்களையும்,சிறிது சிறிதாக தவிர்பதர்க்கும், சமூகத்தில் ஒரு புதிய மருமலர்ச்சியை உண்டு பண்ணுவதும் இச்சங்க இளைஞர்களின் தலையை நோக்கங்களில் சிலவாகும்.